அணைத்து சமூக மக்களும் அர்ச்சகர் ஆகலாமா?
மேல் உள்ளவர் தான் எங்கள் ஊர் வத்தலகுண்டில் உள்ள சென்ராய பெருமாள் (விஷ்ணு). இங்கு காலம் காலமாக பிராமணர் அல்லாதவரே பூஜை செய்கின்றனர். பூஜை செய்யும் பிற சாதியினர் முறையாக பஞ்ச சமஸ்காரத்தை வைணவ மடங்களில் பெற்றுள்ளனர்.
வைணவ மடங்களில் முறையாக பஞ்ச சமஸ்காரம் பெற்ற அனைவரும்(எல்லா சாதியினரும்) தாராளமாக பெருமாள் கோவிலில் பூஜை செய்யலாம். ஆனால், பரம்பரையாக பல தலைமுறைகளாக ஒரு அந்தண குடும்பம் ஒரு கோவிலில் பூஜை செய்யும் பொழுது, அந்த அந்தணரை துரத்தி விட்டு வேறு சாதியினரை அங்கே அமர வைப்பது அக்மார்க் அட்டூழியம்.
காரணம், அந்த பரம்பரையில் வந்தவர் தலைமுறை தலைமுறையாக அக்கோவிலின் இறைவனை சேவித்துக்கொண்டு உள்ளனர். பஞ்சம், படையெடுப்பு இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் அணைத்து கஷ்டங்களிலும் அக்கோவில் இறைவனை கவனித்துக்கொண்டவர்கள். இதன் காரணமாகவே 108 திவ்ய தேசமான ஒன்றில்(முக்திநாத்) பௌத்த சமய பூசாரியே பூஜை செய்வார். அவரை பூஜை செய்ய கூடாது என்று சொல்வது மகா பாவம். அதே போல் திமுக இன்று பிராமணர்களை துரத்தி விட்டு மற்ற சமூக மக்களை பூசாரியாக போடுவது மிக பெரிய பாவம்.
தமிழகத்தில் பல ஆயிரம் பெருமாள் கோவில்கள் கவனிப்பார் இன்றி இருக்கிறது. நீங்கள் தாராளமாக ஒரு வைணவ மடத்தில் பஞ்ச சமஸ்கரம் பெற்று தாராளமாக அந்த கோவில்களில் பூஜை செய்யலாம்.
இஸ்கான் சேவை
மேல் உள்ளது இஸ்கான்(ISKCON) கோவில்.இஸ்கான் கோவில்கள்(பெருமாள்/கிருஷ்ணர் கோவில்) பல ஊர்களில் உள்ளது. இங்கே நீங்கள் சென்றால் உங்களுக்கு முறையான பயிற்சி தந்து இஸ்கான் கோவில்களில் உங்களை பூசாரியாக நியமிப்பார்கள். அணைத்து இஸ்கான் கோவில்களிலும் அணைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பூசாரிகளாக உள்ளனர்.
திமுக அயோக்கியத்தனம்
கருணாநிதி தமிழ்நாட்டை ஆட்சி செய்த பொது அணைத்து சமூகத்தினரும் பூசாரி ஆக ஒரு சட்டம் கொண்டு வந்தார். இன்றும், அதே பிரச்னை மீண்டும் வந்துள்ளது .அந்த சட்டத்தின் கீழ் பலர் பயிற்சி பெற்றனர். உச்ச நீதி மன்றம் அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவித்தது. அந்த சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அனைவரும் அடுத்தநாள் ஈ. வே. ராமசாமி புகைப்படத்தை ஊர்வலமாக கொண்டு சென்று போராட்டம் செய்தனர். ஈ. வே. ராமசாமி இந்துக்கள் கடவுளான ராமரை செருப்பால் அடித்தவர். இந்து கடவுள்களை நாக்கில் நரம்பில்லாமல் நக்கல் செய்தவர். அவர் புகைபடத்தை ஊர்வலமாக கொண்டு சென்று போராடியதிலே அவர்களின் யோகியதை வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. அந்த சட்டத்தில் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவாலய அடிமைகள் மட்டுமே. ஒருவர் கூட உண்மை பக்தி உள்ளவர் இல்லை. அவர்களை நியாயமாக கருவறைக்குள் மட்டுமல்ல கோவிலுக்குள் கூட விடக்கூடாது.
Comments
Post a Comment