பசு மாமிசம் - இந்து மதம் - பசு வதை தடை

 பசுவதை என்பது தீவிரவாதத்தை விட கொடியது.ஆனால் இந்தியா முழுவதும் மாட்டுக்கறி உன்ன தடை இல்லை .சில மாநிலங்களில் மட்டுமே தடை உள்ளது.

  1. பசு நமது தாய்க்கு சமமானது
    1. மனிதர்களுக்கு பால் தருவது இரண்ட இரண்டு பேர் மட்டுமே
      1. பசு
      2. தாய்
    2. மனிதர்களுக்கு தாயை போல் பால் தருவதால் அது போற்றப்படவேண்டியது.
    3. மேல் கூறப்பட்ட காரணத்தால் பசு அணைத்து மனிதர்களுக்கும் புனிதமானது ஆகிறது. மாட்டை கொல்வது என்பது பெற்ற தாயை கொல்வதற்கு சமம்.
    4. மாட்டுக்கறியை உண்பவர் மட்டுமல்லாது, பசு வதையை தடுக்க தவறும் ஒவ்வொருவரும் அந்த பாவத்தில் பங்கு உண்டு. (உங்கள் தாயை யாரவது கொல்ல அழைத்து சென்றால் நீங்கள் சும்மாவா உட்கார்ந்துகொண்டு இருப்பீர்கள் ???)
    5. பசுவதையை ஆதரிக்கும் கட்சிக்கு நீங்கள் வாக்கு செலுத்துவது கூட உங்கள் பாவ கணக்கில் வந்து தான் முடியும்.
    6. தீவிரவாதம் என்பது கூட உடன் பிறந்தவரை(சக ஜீவராசிகளை) கொன்ற பாவத்தை மட்டுமே தரும்.அனால் பசு வதை பெற்ற தாயை கொன்ற பாவத்தை தரும்.ஆடு, கோழி போன்றவற்றை உண்ணும் பொது குறைந்த பாவமே நமக்கு வருகிறது.
  2. மாட்டுகறி ஏற்றுமதி - இந்தியா முதலிடம் ???
    1. ஆங்கிலத்தில் "Beef" என்ற வார்த்தை மாட்டுகறி மட்டும் அல்லாது எருமைமாட்டையும் சேர்ந்ததே குறிக்கும். இந்தியா எருமை மாட்டு கறியை ஏற்றுமதி செய்வதில் தான் முதலிடத்தில் உள்ளது. மாட்டு கறியை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.
    2. எருமை மாடும் பால் தருகிறதே???
      1. இந்தியாவில் பலர் (என்னையும் சேர்த்து) பசும் பாலை மட்டுமே உண்கின்றனர். அதனால் அது என் தலைவலியில் சேராது. எருமை மாட்டு கொலையும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான். அதை விட முக்கியம் பசுவதை தடை.
  3. பாலை மாட்டிடம் திருடி குடிப்பது மட்டும் சரியா ?
    1. இல்லை, காரணம் , முதல் முதலாக மனிதன் பசுவை வளர்க்க ஆரம்பித்த பொழுது நிச்சியம் அது பாவம் தான். அனால் இன்று? நூற்று கணக்கான தலைமுறைகளாக மனிதர்களுக்கு பால் தந்து தந்து கன்றுகள் குறைந்த பாலை குடித்து குடித்து. குறைந்த பாலே கன்றுக்கு தேவை என்ற நிலைக்கு பரிணாம(Evolution) வளர்ச்சி அடைந்து உள்ளது.
  4. பசு ஓகே, காளை மாட்டு கறியில் என்ன பிரச்சனை ??
    1. பசு மாடு தங்கள் தாய்க்கு சமம் என்றால். அப்படி பட்ட பசு மாடு உயிரையே வைத்திருக்கும் அதன் குடும்பத்தினரை கொல்வது எந்த விதத்தில் சரி ?
  5. விவசாயிகள் வருவாய் ???
    1. இந்து மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு
      1. பசு ஒழுங்காக அக்கறையுடன் கவனித்துக்கொள்ளப்படும் இடத்தில் ஏதாவது ஒரு வழியில் செல்வம் வந்து கொட்டும் என்பது இந்து மத நம்பிக்கை .
    2. இந்து மத நம்பிக்கை இல்லாதவர்க்கு
      1. பசு தனது முதிய வயதில் இடும் சாணத்தை கொண்டு கோபர் எரிவாயு தயாரித்தால் அதை விற்கும் விலையை விட அதிகமாக வருவாய் ஈட்டலாம் . மேலும் பசு இயற்கையாக இறந்த பிறகு அதன் தோலை கொண்டும் வருவாய் வரும்.

இறுதியாக , இந்த தமிழ் மண் , மனுநீதி சோழனுடைய மண், தெரியாமல் தேர் சக்கரத்தில் மோதி மாடு உயிரிழந்ததிற்க்கே சொந்த மகனுக்கு மரண தண்டனை விதித்த அறம் தவறா அரசர்கள் வாழ்ந்த பூமியில், வெட்ட வெளிச்சத்தில் நடக்கும் பசு கொலைகள் உச்சகட்ட அட்டூழியம்.

பதில் பிடித்திருந்தால் ஆதரவு வாக்கு அளித்து பகிரவும்.

பின்குறிப்பு : இயற்கை ஆர்வலர் ஸ்பெஷல் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=hGHsPHZtW1g

Source : QuoraAnswerLink

Comments

Popular posts from this blog

நான்மறை தான் வேதம்

உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?