உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?

இதற்கான பதிலை திறந்த மனதுடனும் நெஞ்சுக்கு நேர்மையாகவும் அணுக முயற்சி செய்யுங்கள். இட ஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவு என்பது பிராமணரை மட்டும் அடக்கியது அல்ல. பொதுப்பிரிவில் பிராமணரல்லாத நாட்டுக்கோட்டை செட்டியார், நாயுடு, நாயக்கர், சில சைவ வெள்ளாளர், சில முதலியார், கோமுட்டி செட்டியார் என்ற பல ஜாதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பிராமணர்களின் மக்கள் தொகை மட்டுமே 3% வரும். பிராமணர் அல்லாத மற்ற பொதுப்பிரிவினரையும் சேர்த்து கணக்கிடும்போது பொதுப்பிரிவில் மொத்த மக்கள்தொகை தமிழகத்தில் 15 முதல் 18 சதவீதம் வரை வரும். இந்த 18% ஜாதிகள் தான் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கத்திற்கு காரணம் அவர்கள் ஜாதி வெறியோ தந்திரமோ அல்ல. இவர்கள் ஆதிக்கம் செலுத்த முழுமுதற் காரணம் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட காலியிங்களை மட்டும் சில சாதிகளுக்கு ஒதுக்குவதில்லை. ஒரு அரசாங்க தேர்வில் ஜாதியின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் முயற்சியின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டிற்கு IAS தேர்வில் பொதுப்பிரிவினர் முப்பத்திரண்டு வயதிற்குள் ஆறு முயற்சிகளை எடுக்கலாம். OBC பிரிவினர் 35 வயதிற்குள் 9 முயற்சிகளை எடுக்கலாம். SC/ST பிரிவினர் 37 வயது இருக்கும் எவ்வளவு முயற்சிகளை வேண்டுமானாலும் எடுக்கலாம். 36 வயதில் பத்தாவது முறை தேர்வு எழுதும் பட்டியலின மாணவன் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் வேறு ஒரு பட்டியலின மாணவன் ஆறாவது முறை 27ஆவது வயதில் தேர்வு எழுதும் மாணவன் வெற்றிபெறும் சாத்தியக்கூறுகளை விட அதிகம். இதன் காரணமாக இட ஒதுக்கீடு உள்ள பிரிவுகள் அரசாங்க வேலையில் நுழையும் வயது அதிகமாகிறது. சராசரியாக ஒரு பொதுப் பிரிவில் உள்ள மாணவன் இருபத்தி ஏழு வயதில் அரசு அதிகாரி ஆகிறான் என்றால், ஒரு ஓபிசி மாணவன் முப்பத்தி மூன்று வயதில் அரசாங்க உத்தியோகத்தில் நுழைவான், அதே பட்டியலில் மாணவன் முப்பத்தி ஆறு வயதில் அரசாங்க உத்தியோகத்தில் நுழைவான். அரசாங்க உத்தியோகம் என்பது மூன்று வருசத்துக்கு ஒருமுறை பதவி உயர்வு வரும் உத்தியோகம். இதன் காரணமாக பொதுப் பிரிவில் இருந்த மாணவன் தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு பட்டியலின மாணவனை விட மூன்று பதவி உயர்வுகள் அதிகமாக பெருவான். இதுதான் நீங்கள் சொன்ன கருத்திற்கு முக்கியமான காரணம். மேலும் 2021 ஆம் வருடம் நீட் தேர்வில் நிரப்பப்பட்ட மூவாயிரம் சொச்சம் மருத்துவக் காலியிடங்களில் 69% இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட இடங்களை தவிர்த்து பொதுப் பிரிவில் இருந்த 900 இடங்களில் சுமார் 750 இடங்களை OBC/SC/ST மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். பொதுப் பிரிவுக்கு என்று இருந்த காலியிடத்தில் பொதுப் பிரிவினருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 150 மட்டுமே. இந்த 150 இடங்களிலும் பிராமணர் மட்டுமல்லாது மற்ற பொதுப்பிரிவினரும் அடக்கம். 18% மக்கள் தொகை கொண்ட ஒரு பிரிவிற்கு வெறும் 5% இடங்கள் மட்டுமே கிடைத்தது. இப்பொழுது கூறுங்கள் யார் யார் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று.


இடஒதுக்கீடு என்பது சமூக நீதி அல்ல சமூக அநீதி. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு பிராமணர் மட்டும் காரணம் இல்லை பிராமணர், சத்ரியர் , வணிகர் , சூத்திரர் என்ற நான்கு ஜாதிகளும் பட்டியலின மக்களின் ஒடுக்குமுறைக்கு சமமான காரணிகள். அந்த காரணிகளுக்கே இட ஒதுக்கீடு (வாக்கு வங்கி காரணமாக) வழங்குவது என்பது கேலிக்கூத்து.

Comments

Popular posts from this blog

நான்மறை தான் வேதம்

பசு மாமிசம் - இந்து மதம் - பசு வதை தடை