பெட்ரோல் விலை கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதா?

 

பெட்ரோல் விலை கட்டுக்குள் வர வாய்ப்பு இல்லை. வரவும் கூடாது. பெட்ரோல் விலையை குறைக்கும் ஒரு அரசு மனித குல விரோத அரசு.

சூழலியல் காரணம்

இந்த உலகம் என்பது நம் தலைமுறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்த உலகத்தின் மீது நம் சந்ததியினருக்கு உரிமை உள்ளது. நாம் பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிமங்கள்(Fossil fuels) பயன்பாட்டை குறைக்காவிட்டால் நம் பிள்ளைகளும் பேரன்களும் சுடுகாட்டில்(போன்ற பூமீ) தான் வாழ வேண்டும்.

புதைபடிவ எரிமங்கள் பயன்பாட்டை குறைக்க ஒரே வழி மின்சார வாகனங்களுக்கு மாறுவது மட்டுமே. மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும் என்றால் மக்கள் பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்களை பயன்படுத்தும் பொழுது பணம் குறைவாக செலவு ஆக வேண்டும். அதற்கு பெட்ரோல் விலையை உயர்த்துவது மட்டுமே ஒரே வழி.

பொருளாதார காரணம்

கச்சா என்னை வளம் இந்தியாவில் இல்லாததால் நாம் கச்சா எண்ணெயை பெரும்பாலும் இறக்குமதி செய்கிறோம். ஒரு நாட்டில் இறக்குமதி கைமீறி சென்றால் நாட்டின் நாணய மதிப்பு குறைந்து நாடு முழுவதுமாக திவால் ஆகும். அப்பிடி நடந்தால் நீங்கள் பல வருடமாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மதிப்பில்லாமல் போகும்.

பெட்ரோல் விலை குறைத்தால் பெட்ரோல் இறக்குமதி அதிகமாகும். நாடு திவால் ஆகும்.

மக்கள் விலைகளை பற்றி கண்டுகொள்ளாதது

மக்கள் என்னதான் பெட்ரோல் விலையை பற்றி ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், மக்கள் பெட்ரோல் விலையை பற்றி கவலைபடுவது போல் தெரியவில்லை. காரணம்,

கீழ் உள்ளது மிக அதிகமான மைலேஜ் தரும் இரு சக்கர வாகனங்களின் பட்டியல்

Top 10 Mileage Bikes in India: Best Fuel Efficient Bikes in 2020

கீழ் உள்ளது மிகவும் அதிகமாக விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களின் பட்டியல்

Best Two Wheeler in India: Top 10 Best Selling Vehicles in 2020

இரண்டு பட்டியலுக்கும் விலையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அனால் மக்கள் மைலேஜ் தரும் வாகனங்களை விட சொகுசையும் சௌகரியத்தையும் முக்கியமாக கருதுகின்றனர்.

சொகுசு

நீங்கள் ஒத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் கார் ஒரு சொகுசு வாகனம் தான். நீங்கள் பஸ்சில் பயணம் செய்யும் பொழுது கிலோமீட்டருக்கு காரை விட குறைந்த பெட்ரோலை/டீசலை பயன்படுத்துகிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருந்தால் தான் நாம் ஒரு வேலைக்கு கார் பயன்படுத்தும் முன் யோசித்துவிட்டு பயன்படுத்துவோம்.

விலைவாசி உயர்வு

பலர் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்தால் விலைவாசியும் கூடும், சாமானியர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறுகின்றனர். விலைவாசியை தீர்மானிக்கும் பல காரணங்களில் டீசல் விலை ஒரு சிறு காரணம் மட்டுமே. மற்ற காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் பொழுது டீசல் விலை அதிகரித்தாலும் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

எடுத்துக்காட்டு: சேலம்-சென்னை 8 வழி சாலை, இது சேலத்திற்கும் சென்னைக்கும் உள்ள தூரத்தை 324 கி.மி இல் இருந்து 274 கி.மி ஆக குறைக்கும். இது டீசல் விலையை(டீசல் பயன்பாட்டை) விலைவாசியின் பார்வையில் 16% குறைத்ததற்கு சமம்.

இது போல் பல விசயங்கள் செய்து மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்துள்ளது.

கீழ் உள்ளது தான் விலைவாசி(inflation) உயர்வு குறித்த தகவல்.

Inflation rate in India 1984-2024 | Statista

மின்சார வாகனங்கள் விலை அதிகம் ???

அதிகமாக விற்கும் வாகனங்களின் பட்டியலில் இருக்கும் வாகனங்களை விட விலை குறைவான மற்றும் சமமான மின் வாகனங்கள் இதோ,

Cheap Electric Bikes in India

இறுதியாக மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஆரோக்கியமான நல்ல செயல் தான்.

Comments

Popular posts from this blog

நான்மறை தான் வேதம்

பசு மாமிசம் - இந்து மதம் - பசு வதை தடை

உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?