தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் ????

 முன்குறிப்பு : என் தாய்மொழி தெலுங்கு.

தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்று கூறுவது உணர்வு பூர்வமாக சரியாக பட்டாலும் அறிவுப்பூர்வமாக யோசித்தால் அது முட்டாள்தனம் என்பது புரியும்.

யார் தமிழர்?

நான் ஆங்கில கோராவில் உலாத்திக்கொண்டிருந்த பொழுது ஒரு கருத்து கண்ணில் பட்டது. இதோ,

மேல் உள்ள கருத்தை இட்டவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர். ராஜேந்திர சோழர் கங்கைக்கு படை எடுத்த பொழுது அவரின் படையில் இருந்த சிலர் வடக்கே தங்கிவிட்டனர் அவர்களது வம்சாவளியில் வந்தவர் தான் மேலுள்ளவர். இவருக்கு தமிழ் தெரியாது. இவர் தாய் மொழி இந்தி ஆனால் இவரின் மூதாதையரின் தாய்மொழி தமிழ். இவர் தமிழரா???

ஆம் என்றல்,

இவருக்கு தமிழ் நாட்டை ஆட்சி செய்ய உரிமை உள்ளதா? சோழ படை தளபதியின் வம்சாவளியினரின் கால் தூசிக்கு கூட "நாம் தமிழர்" கட்சியினர் தேறமாட்டார்கள். தமிழ் சுத்தமாக தெரியாத இவருக்கு உரிமை உண்டு என்றால், தமிழின் மூன்று தூண்களான இயல், இசை மற்றும் நாடகதில், நாடகதின் மூலம் தமிழ் வளர்க்க நாடக கம்பனி நடத்திய எனது எள்ளு தாத்தாவிற்கு(30 வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்த) உரிமை இல்லை என்பது கேலிக்கூத்து.

இல்லை என்றல்,

மாமன்னர் ராஜேந்திரரின் கங்கை கொள்ளும் படையெடுப்பின் பொழுது சில உத்தர பிரதேசத்தவர்கள்(இந்தியை தாய்மொழியாக கொண்டவர்) சிலர் திருவரங்கம், ராமேசுவரம் போன்றவற்றை பார்க்கவோ அரசியல் காரணங்களுக்காகவோ தமிழ்நாட்டில் வந்து குடி புகுந்து இருந்தனர். அவர்கள் வம்சாவளியினர் இன்று இந்தியை மறந்து தமிழை தாய்மொழியாக கொண்டிருப்பர். நீங்கள் தமிழர் என்று கூறிக்கொண்டால், உங்களிடம் நீங்கள் இந்த உத்தர பிரதேச மக்களின் வம்சம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த டெஸ்ட் மூலமாகவும் உங்களால் இதை உறுதிப்படுத்த முடியாது.

மொழிகளும் மக்களும்

எனது தாய் மொழி தெலுங்கு. எங்கள் மூதாதையர்கள் தள்ளிக்கோட்டை போரின்போது(1565 போதுஆண்டு) விஜய நகரம் பீஜப்பூர் சுல்தான்களிடம் அழிந்த போது தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள்.15–20 தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசிப்பதால் எங்களுக்கு தெலுங்கு எழுதி படிக்க கூட தெரியாது.

அதில் இருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் சில வார்த்தைகள் தெலுங்கில் இருந்து தமிழாக மாறுகிறது. எடுத்துக்காட்டுக்கு என் தாத்தா திங்கள்கிழமையை சோமவாரம் என்பார், உணவுதட்டை கஞ்சம் என்பார்.நான் திங்கள்கிழமையை திங்கள்கிழமை என்றும் தட்டை தட்டு என்று தான் தெலுங்கிலும் பேசுவேன். இப்பிடி பல தலைமுறைகளுக்கு பிறகு எனது தாய்மொழி தமிழக ஒவ்வொரு வார்த்தையாக மாறும்.

எனது சொந்தக்காரர்களில் சிலருக்கு தெலுங்கு சுத்தமாக வராது. அவர்கள் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, தமிழில் தான் பேசுவர். இது இன்று நடப்பதால் என் சமூக மக்களுக்கு தெலுங்கு தாய்மொழி என்பது அனைவருக்கும் தெரிகிறது.இதை வேறு சமூகத்திற்கு 200 வருடம் முன்பு நடந்திருந்தால் இன்று அந்த சமூகத்திற்கு தாய்மொழி தமிழ் ஆகி இருக்கும்.

முடிவுரை

தமிழர்/தெலுங்கர்/கன்னடர்/இந்திக்காரர்….. என்பதற்கு ஒரு "definition" என்பது இல்லவே இல்லை.

ஒழுங்காக ஆட்சி செய்ய தேவை தாய்மொழி அல்ல. நிர்வாக திறன், நேர்மை மற்றும் மாநில மொழி பேசும் மற்றும் எழுதும் திறன். அதனால் தமிழை பேசவும் எழுதவும் தெரிந்த யார் வேண்டுமானாலும் தமிழ் நாட்டை ஆளலாம் என்பது நியாயம்.

பின்குறிப்பு : சிங்களர்களின் மரபணு 75% ஈழ தமிழர்களுடன் ஒத்துப்போகிறது. இப்பொழுது சொல்லுங்கள் சிங்களர்கள் தமிழரகளா? இது பதில் இல்லா கேள்வி.

நன்றி

பதில் பிடித்திருந்தால் share செய்யவும்

ராம நாமமே போற்றி - (जय श्री राम - ஜெய் ஸ்ரீ ராம் )

யாதும் ஊரே யாவரும் கேளிர் - (वसुधैव कुटुम्बकम् - வசுதெய்வ குடும்பகம்)


Source : https://ta.quora.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/answers/291743952

Comments

Popular posts from this blog

நான்மறை தான் வேதம்

பசு மாமிசம் - இந்து மதம் - பசு வதை தடை

உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?