Posts

உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?

இதற்கான பதிலை திறந்த மனதுடனும் நெஞ்சுக்கு நேர்மையாகவும் அணுக முயற்சி செய்யுங்கள். இட ஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவு என்பது பிராமணரை மட்டும் அடக்கியது அல்ல. பொதுப்பிரிவில் பிராமணரல்லாத நாட்டுக்கோட்டை செட்டியார், நாயுடு, நாயக்கர், சில சைவ வெள்ளாளர், சில முதலியார், கோமுட்டி செட்டியார் என்ற பல ஜாதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பிராமணர்களின் மக்கள் தொகை மட்டுமே 3% வரும். பிராமணர் அல்லாத மற்ற பொதுப்பிரிவினரையும் சேர்த்து கணக்கிடும்போது பொதுப்பிரிவில் மொத்த மக்கள்தொகை தமிழகத்தில் 15 முதல் 18 சதவீதம் வரை வரும். இந்த 18% ஜாதிகள் தான் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கத்திற்கு காரணம் அவர்கள் ஜாதி வெறியோ தந்திரமோ அல்ல. இவர்கள் ஆதிக்கம் செலுத்த முழுமுதற் காரணம் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட காலியிங்களை மட்டும் சில சாதிகளுக்கு ஒதுக்குவதில்லை. ஒரு அரசாங்க தேர்வில் ஜாதியின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் முயற்சியின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டிற்கு IAS தேர்வில் பொதுப்பிரிவினர் முப்பத்திரண்டு வயதிற்குள் ஆறு முயற்சிகளை எடுக்கலாம். OBC பிரிவினர் ...

ராமரும் தமிழனும்!

Image
10 ஏப்ரல் 2022 வடநாட்டு கடவுள் இராமனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கும் இராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறியாத இந்த சங்கிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே என்னிடம் வந்தார் நண்பர் ஒருவர். இப்படியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அந்த நண்பர் என்னிடம், ஏன் இவர்கள் இராமனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று கேட்டார்....! அதற்கு நான் சேர சோழ பாண்டியர்கள் என்று மூவேந்தர்கள் முதல் இந்த நிலப்பரப்பை ஆண்ட பூர்வகுடிகள் அனைவரும் இராமரை போற்றி புகழ்ந்து இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் மற்றும் பெயர்களை அடிப்படையாகக் கொண்டும் தனது வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்துள்ளனர் எனும்போது பூர்வகுடிகளான சங்கிகள் இராமநாமம் பாடுவதில் என்ன பிழை என்று கேட்க, மனதிற்குள் (நீயும் ஒரு சங்கியா) திட்டியவாறே அதெப்படி மூவேந்தர்களும் இராமநாமம் பாடினார்கள் என்று கேட்டார்...! நானும் கொஞ்சநேரம் இழைப்பாறலாம்னு ஆரம்பித்தேன்... இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு மூவேந்தர்கள் மட்டுமில்லை ப்ரோ சங்கப்புலவர்கள், சித்தர்கள் முதல் கடைக்கோடி பக்தர்கள் வரை இராமநாமம் பாடியதற்கு நம்மிட...

அணைத்து சமூக மக்களும் அர்ச்சகர் ஆகலாமா?

Image
  மேல் உள்ளவர் தான் எங்கள் ஊர் வத்தலகுண்டில் உள்ள  சென்ராய பெருமாள்  (விஷ்ணு). இங்கு காலம் காலமாக பிராமணர் அல்லாதவரே பூஜை செய்கின்றனர். பூஜை செய்யும் பிற சாதியினர் முறையாக பஞ்ச சமஸ்காரத்தை வைணவ மடங்களில் பெற்றுள்ளனர். வைணவ மடங்களில் முறையாக பஞ்ச சமஸ்காரம் பெற்ற அனைவரும்(எல்லா சாதியினரும்) தாராளமாக பெருமாள் கோவிலில் பூஜை செய்யலாம். ஆனால், பரம்பரையாக பல தலைமுறைகளாக ஒரு அந்தண குடும்பம் ஒரு கோவிலில் பூஜை செய்யும் பொழுது, அந்த அந்தணரை துரத்தி விட்டு வேறு சாதியினரை அங்கே அமர வைப்பது  அக்மார்க் அட்டூழியம் . காரணம், அந்த பரம்பரையில் வந்தவர் தலைமுறை தலைமுறையாக அக்கோவிலின் இறைவனை சேவித்துக்கொண்டு உள்ளனர். பஞ்சம், படையெடுப்பு இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் அணைத்து கஷ்டங்களிலும் அக்கோவில் இறைவனை கவனித்துக்கொண்டவர்கள். இதன் காரணமாகவே 108 திவ்ய தேசமான ஒன்றில்(முக்திநாத்) பௌத்த சமய பூசாரியே பூஜை செய்வார். அவரை பூஜை செய்ய கூடாது என்று சொல்வது மகா பாவம். அதே போல் திமுக இன்று பிராமணர்களை துரத்தி விட்டு மற்ற சமூக மக்களை பூசாரியாக போடுவது மிக பெரிய பாவம். தமிழகத்தில் பல ஆயிரம் பெருமாள...