உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்க முடிவது எப்படி?
இதற்கான பதிலை திறந்த மனதுடனும் நெஞ்சுக்கு நேர்மையாகவும் அணுக முயற்சி செய்யுங்கள். இட ஒதுக்கீடு இல்லாத பொதுப் பிரிவு என்பது பிராமணரை மட்டும் அடக்கியது அல்ல. பொதுப்பிரிவில் பிராமணரல்லாத நாட்டுக்கோட்டை செட்டியார், நாயுடு, நாயக்கர், சில சைவ வெள்ளாளர், சில முதலியார், கோமுட்டி செட்டியார் என்ற பல ஜாதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பிராமணர்களின் மக்கள் தொகை மட்டுமே 3% வரும். பிராமணர் அல்லாத மற்ற பொதுப்பிரிவினரையும் சேர்த்து கணக்கிடும்போது பொதுப்பிரிவில் மொத்த மக்கள்தொகை தமிழகத்தில் 15 முதல் 18 சதவீதம் வரை வரும். இந்த 18% ஜாதிகள் தான் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கத்திற்கு காரணம் அவர்கள் ஜாதி வெறியோ தந்திரமோ அல்ல. இவர்கள் ஆதிக்கம் செலுத்த முழுமுதற் காரணம் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட காலியிங்களை மட்டும் சில சாதிகளுக்கு ஒதுக்குவதில்லை. ஒரு அரசாங்க தேர்வில் ஜாதியின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் முயற்சியின் எண்ணிக்கையும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டிற்கு IAS தேர்வில் பொதுப்பிரிவினர் முப்பத்திரண்டு வயதிற்குள் ஆறு முயற்சிகளை எடுக்கலாம். OBC பிரிவினர் ...