அணைத்து சமூக மக்களும் அர்ச்சகர் ஆகலாமா?
மேல் உள்ளவர் தான் எங்கள் ஊர் வத்தலகுண்டில் உள்ள சென்ராய பெருமாள் (விஷ்ணு). இங்கு காலம் காலமாக பிராமணர் அல்லாதவரே பூஜை செய்கின்றனர். பூஜை செய்யும் பிற சாதியினர் முறையாக பஞ்ச சமஸ்காரத்தை வைணவ மடங்களில் பெற்றுள்ளனர். வைணவ மடங்களில் முறையாக பஞ்ச சமஸ்காரம் பெற்ற அனைவரும்(எல்லா சாதியினரும்) தாராளமாக பெருமாள் கோவிலில் பூஜை செய்யலாம். ஆனால், பரம்பரையாக பல தலைமுறைகளாக ஒரு அந்தண குடும்பம் ஒரு கோவிலில் பூஜை செய்யும் பொழுது, அந்த அந்தணரை துரத்தி விட்டு வேறு சாதியினரை அங்கே அமர வைப்பது அக்மார்க் அட்டூழியம் . காரணம், அந்த பரம்பரையில் வந்தவர் தலைமுறை தலைமுறையாக அக்கோவிலின் இறைவனை சேவித்துக்கொண்டு உள்ளனர். பஞ்சம், படையெடுப்பு இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் அணைத்து கஷ்டங்களிலும் அக்கோவில் இறைவனை கவனித்துக்கொண்டவர்கள். இதன் காரணமாகவே 108 திவ்ய தேசமான ஒன்றில்(முக்திநாத்) பௌத்த சமய பூசாரியே பூஜை செய்வார். அவரை பூஜை செய்ய கூடாது என்று சொல்வது மகா பாவம். அதே போல் திமுக இன்று பிராமணர்களை துரத்தி விட்டு மற்ற சமூக மக்களை பூசாரியாக போடுவது மிக பெரிய பாவம். தமிழகத்தில் பல ஆயிரம் பெருமாள...