பெட்ரோல் விலை கட்டுக்குள் வர வாய்ப்புள்ளதா?
பெட்ரோல் விலை கட்டுக்குள் வர வாய்ப்பு இல்லை. வரவும் கூடாது. பெட்ரோல் விலையை குறைக்கும் ஒரு அரசு மனித குல விரோத அரசு. சூழலியல் காரணம் இந்த உலகம் என்பது நம் தலைமுறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்த உலகத்தின் மீது நம் சந்ததியினருக்கு உரிமை உள்ளது. நாம் பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிமங்கள்(Fossil fuels) பயன்பாட்டை குறைக்காவிட்டால் நம் பிள்ளைகளும் பேரன்களும் சுடுகாட்டில்(போன்ற பூமீ) தான் வாழ வேண்டும். புதைபடிவ எரிமங்கள் பயன்பாட்டை குறைக்க ஒரே வழி மின்சார வாகனங்களுக்கு மாறுவது மட்டுமே. மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும் என்றால் மக்கள் பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாகனங்களை பயன்படுத்தும் பொழுது பணம் குறைவாக செலவு ஆக வேண்டும். அதற்கு பெட்ரோல் விலையை உயர்த்துவது மட்டுமே ஒரே வழி. பொருளாதார காரணம் கச்சா என்னை வளம் இந்தியாவில் இல்லாததால் நாம் கச்சா எண்ணெயை பெரும்பாலும் இறக்குமதி செய்கிறோம். ஒரு நாட்டில் இறக்குமதி கைமீறி சென்றால் நாட்டின் நாணய மதிப்பு குறைந்து நாடு முழுவதுமாக திவால் ஆகும். அப்பிடி நடந்தால் நீங்கள் பல வருடமாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மதிப்பில்லாமல் போகும். பெட்ரோ...