ராமரும் தமிழனும்!
10 ஏப்ரல் 2022 வடநாட்டு கடவுள் இராமனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கும் இராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறியாத இந்த சங்கிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே என்னிடம் வந்தார் நண்பர் ஒருவர். இப்படியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அந்த நண்பர் என்னிடம், ஏன் இவர்கள் இராமனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று கேட்டார்....! அதற்கு நான் சேர சோழ பாண்டியர்கள் என்று மூவேந்தர்கள் முதல் இந்த நிலப்பரப்பை ஆண்ட பூர்வகுடிகள் அனைவரும் இராமரை போற்றி புகழ்ந்து இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் மற்றும் பெயர்களை அடிப்படையாகக் கொண்டும் தனது வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்துள்ளனர் எனும்போது பூர்வகுடிகளான சங்கிகள் இராமநாமம் பாடுவதில் என்ன பிழை என்று கேட்க, மனதிற்குள் (நீயும் ஒரு சங்கியா) திட்டியவாறே அதெப்படி மூவேந்தர்களும் இராமநாமம் பாடினார்கள் என்று கேட்டார்...! நானும் கொஞ்சநேரம் இழைப்பாறலாம்னு ஆரம்பித்தேன்... இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு மூவேந்தர்கள் மட்டுமில்லை ப்ரோ சங்கப்புலவர்கள், சித்தர்கள் முதல் கடைக்கோடி பக்தர்கள் வரை இராமநாமம் பாடியதற்கு நம்மிட...